4.வளரிளம் பருவத்தில் மனரீதியான மாற்றங்கள்:
மனநிம்மதிக்கான வழிகள்:
அன்பு மனம்
சிரித்த முகம்
நன்றி உணர்வு
நகைச்சுவை உணர்ச்சி
எதையும் தாங்க்கும் இதயம்
சுற்றுப்புறத் தூய்மை
ஆரோக்கியமான உடல் நலம்
பிறன் மனை நோக்காப் பேராண்மை
இன்சொல் பேசும் வாய்மை
நிலைக்குத தகுந்த நினைப்பு
விட்டுத்தரும் மனப்பாங்கு
பிறர்கேடு சூழா எண்ணம்
இல்லறத்தில் ஈடுபாடு
நல்லதே நாடும் மனம்
சுயநல எதிர்பார்ப்பு இல்லா உழைப்பு....
எப்போதும் மன நிம்மதிக்கு இவையே வழிகள்.
4.0 வளரிளம் பருவத்தில் மனரீதியான மாற்றங்கள்:
4.1 மன ரீதியான மாற்றம்:
உடல் ரீதியான மாற்றங்கள் வளரிளம் பருவத்தில் ஒரு பெண்ணிடம் கண்கூடாகத் தெரியும். ஆனால் மனரீதியான மாற்றங்கள் வளரிளம் பருவத்தினரிடையே வெளியே தெரியாது.
4.2 மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தல்:
வளரிளம் பருவப் பெண்ணிடம் இயற்கையாக் இருக்கக்கூடிய சுபாவங்கள். தன்னை மிகவும் அழகாக வெளிப்படுத்திக் கொள்ள விரும்புதல்.
பல வகை அலங்காரங்களைச் செய்து கொள்ள ஆசைப் படுதல் விதவிதமாக ஆடைகளை அணிந்து கொண்டு அதன் மூலம் மற்றவர்களின் கவனத்தினை ஈர்க்க முயல்வதும் மற்றவர்களின் பாராட்டுதலுக்காக காத்திருப்பது சுபாவங்கள் நீண்டு கொண்டே செல்லும்.
4.3 மனம் ஒரு குரங்கு:
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால்.....
எனக் கவிஞர் பாடியுள்ளார்.
ஆம் ! இந்தப் பாட்டில் 10% உண்மை உள்ளது. குறிப்பாக வளரிளம் பருவத்தில் இம்மனக் குரங்குகளின் சேட்டை அதிகமாகக் காணப்படும்.
அச்சமயத்தில் அப்பருவ எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், இலக்குகள் ஆகியவற்றினை வகைப்படுத்தியும் வழிப்படுத்துவதற்க்கும் ஊக்குவித்தால் வளரிளம் பெண்ணின் வாழ்க்கை, முன்னேற்ற பாதையில் பயணிக்க வழி வகுக்கலாம்.
4.4 வெளி ஈர்ப்பு:
ஒவ்வொரு வளரிளம் பருவப் பெண்ணும், தனக்குப் பிடித்த நபர்கள் (நடிகையர், ஆசிரியை உட்பட), நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் நடை, உடை, பாவனைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களைக் கற்பனை நாயகிகளாக பாவித்து அதே போன்று தாமும் இருக்க விரும்புவர், முயற்சி செய்வர், இது இயல்பு.
4.5 சூழ்நிலை:
இந்த வளரிளம் பருவத்தில் நல்ல மதிப்பு, சுய கௌரவம், உண்மை, முயற்சி, இலக்குகள் போன்ற வாழ்வில் முன்னேறமடைந்த நண்பர்களையும், குணங்களையும் உடைய மனிதர்களுக்கு நடுவில் வளர்ந்தால் அத்தகைய நற்பண்புகளும், குணங்களும் வளரிளம் பெண்ணிடம் அமைந்து விடுவதற்க்கு வாய்புகள் அதிகம் உண்டு.
4.6 காந்தியின் குரங்கு:
வளரிளம் பெண்ணே, இந்த வாழ்க்கையில் மிக முக்கியமான சஞ்சலத்திற்கு ஆளாகாதே ! மனக் குழப்பத்திற்கு ஆளாகாதே !!
நல்லனவற்றைப் பார் !
நல்லனவற்றைக் கேள் !!
நல்லனவற்றைக் பேசு !!!
வளரிளம் பருவப் பெண்ணே, காந்தியின் மூன்று குரங்குகள் சொல்லும் " நல்லதை பார், நல்லதை கேள், நல்லதை பேசு" என்ற செய்தியை உன்னுடைய வாழ்க்கையின் தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு வாழ முயற்சி செய்ய வேண்டிய பருவம்தான் 15-19 வயது வரையிலான வளரிளம் பருவம்.
4.7 நல்லதைத் தேடு :
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஆயிரம் மைல் தொலைவிற்கான பயணம், முதல் அடியில்தான் உள்ளது. இந்தக் கூற்று வளரிளம் பெண்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு, வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கூற்று. ஒரு வளரிளம் பருவப் பெண், சரியான நேரத்தில், அந்த முதல் அடியை சரியான பாதையில், சரியான கோணத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
வளரிளம் பெண்ணே ! நீங்கள் வாழ்க்கையில் பயணம் செய்ய வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இலக்கை சரியாக நிர்ணயித்து, உங்கள் இலக்கு நோக்கிய பயணத்தில் தெளிவாக முன்னேறுங்கள்.
மனித வாழ்க்கைக்கு பொழுது போக்கு மிக அவசியம். ஆனால் பொழுது போக்கே வாழ்க்கை அல்ல ! வளரிளம் பெண்ணுக்கு ஆரோக்கியமான பொழுது போக்கு மிக மிக அவசியம்.
4.7.1 செய்திதாள்:
செய்திதாள்கள், வார மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகளில் நல்ல செய்திகளைத் தேர்ந்தெடுத்து படிப்பது, அறிவை வளர்க்கும் செயல் மற்றும் சிந்தனையை வளர்க்க்கும் செயல்.
இன்று நல்ல நூல்களைத் தேர்தெடுத்து படிப்பவர்களே, நாளை தலைவர்களாக உருவெடுக்கிறார்கள். இதைத்தான் ஆங்கிலத்தில்,
Readers are Leaders : Leaders are readers என்று அழைக்கிறார்கள்.
4.7.2 வானொலியில்
வானொலியில் நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கேட்டு தன்னைத்தானே வளர்த்துக் கொள்ளும் வழியினை வளரிளம் பருவப் பெண் கடைப்பிடிக்க வேண்டும்.
4.12 வளரிளம் பருவத்தின் இரு கண்கள்:
ஒழுக்கம் மற்றும் தன்னை மதித்தல் ஆகிய இரு குணங்களும் நம் இரு கண்களைப் போல, எப்பொழுதும் இப்பருவத்தில் பயன்படுத்தவேண்டிய கருவிகள் எனக் கூறலாம்.
காண்பவற்றையெல்லாம் கண்டு-அது போல் நாமும் எனத் துடிக்கும் இப்பருவத்தின் அலைபாயும் மனத்தினை 'குதிரையின் கடிவாளம்' போல தேவைக்கேற்ப செயல்படச் செய்ய வேண்டும்.
எது சரி , எது தவறு ?
நமக்கு தேவையா ?
இல்லையா, நமக்குப் பொருந்துமா ? இல்லையா என்று நம்மையே வரையறுத்துக் கொண்டு, சீர்தூக்கிப் பார்த்து, சிந்தித்து செயல்பட வேண்டிய பருவம் தான் இந்த வளரிளம் பருவம்.
4.13 வாழ்க்கையில் வெற்றி....தொல்வி.
வளரிளம் பருவத்தில் ஒழுக்கத்தைக் கடைபிடித்தால் முன்னேற்றம் மகிழ்ச்சி, வெற்றி உண்டாகும்.
அதே நேரத்தில் இந்த வளரிளம் பருவத்தில் ஒழுக்கமின்மையால் அவமானம், வருத்தம், தோல்வி நேரிடும்.
பெண்ணே....உன் வாழ்க்கை உன் கையில்.
4.14 ஒழுக்க அம்சங்கள்:
பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல் கேட்டல் படிப்பில் ஆர்வம், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுதல், அவர்களுடன் உரையாடுதல் அவர்களிடையே காணப்படும் நல்ல குணங்களையும் பழக்க, வழக்கங்களையும் கற்றுக் கொள்ளுதல் ஆகியவை ஒழுக்கத்திற்கான அம்சங்கள்.
4.15 ஒழுக்கமின்மையின் அம்சங்கள்:
பெற்றோர் சொல் கேளாமை, படிப்பில் ஆர்வமின்மை, பொய் பேசுதல், தீய நண்பர்கள், ஆத்திரப்படுதல், பொறாமை, மூர்க்ககுணம், கீழ்ப்படியாமை, தூய்மையின்மை, போன்றவை ஒழுக்கமின்மைக்கான சில அம்சங்கள்.
4.16 நிதானமும்...விடாமுயற்சியும்.
ஒழுக்கம், சுயமதிப்பு (தன்னை மதித்தல்) போலவே நிதானமும், விடாமுயற்சியும், வாழ்க்கையில் முன்னேற உதவக் கூடிய இரு கருவிகள்.
இந்த வளரிளம் பருவத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய கடமைகள், பொறுப்புகள், அவை மீது ஆற்ற வேண்டிய செயல் மற்றும் அதற்குண்டான செயல் திட்டங்களை வடிவமைக்க நிதானம் தேவை.
நிதான குணத்தினை வளர்த்துக் கொண்டால் நம்மிடம் காணப்படும் விஷயங்களை ஆராய்ந்து, சரியானவைகளைத் தேர்ந்தெடுத்து அதைப் பின்பற்ற இப்பருவத்தினர் மனதளவில் மாற்றங்களை நல்ல முறையில் கையாண்டு எளிதாக வென்று விடலாம்.
4.17 கண்டதே காட்சி கொண்டதே கோலம்:
இதற்கு எதிர்மாறாக "கண்டதே காட்சி கொண்டதே கோலம்", என விளைவுகளின் ஆழம் அறியாது காலை வைத்தால், சரி செய்து கொள்ள முடியாத துன்ப வலையில் வீழ்ந்து அடிபட்டு வாழ்க்கையில் தோல்வியினை சுமந்தவாறே காலம் முழுவதும் வாழ நேரிடும். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வாய்ப்பு, உங்களிடம் தரப்பட்டுள்ளது ! அதனை நீங்கள் முடிவு செய்யுங்கள், முன்னேறுவதற்கான பாதையினைத் தேர்ந்தெடுக்க உங்கள் மனம் விரும்ம்புகிறது அல்லவா.
உன் வாழ்க்கை......உன் கையில் !
உன் ஆரோக்கிய வாழ்க்கை...உன் உண்வின் கையில் !!
வளரிளம் பருவம் பெண்ணே....
உண்டி சுருக்கி....உள்ளொளி பெருக்கி
நிம்மதியாக வாழ் முற்படு !
வளரிளம் பெண்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய நற்குணங்கள் மற்றும் பண்புகள்:
1. பெற்றோர் சொல் கேட்டல்
2. பெரியவர்களை மதித்தல்
3. படிப்பில் கவனம் செலுத்துதல்
4. ஆர்வம்
5. உண்மை
6. மதிப்பு
7. இலக்கு நிர்ணயித்தல்
8. உழைப்பு
9. விடாமுயற்சி
10. நல்ல எண்ணங்கள்.
வளரிளம் பருவப் பெண்ணே, நீ...நூறில் ஒருத்தியா ? அல்லது நூற்றில் ஒருத்தியா ?
வாழ்கை
வாழ்கை ஒரு சவால் ,அதனைச் சந்தியுங்கள்.
வாழ்கை ஒரு பரிசு , அதனை ஏற்றுக் கொல்லுங்கள்.
வாழ்கை ஒரு பயணம், அதனை மேற்கொள்ளுங்கள்.
வாழ்கை ஒரு கடமை ,அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்கை ஒரு விளையாட்டு ,அதனை விளையாடுங்கள்.
வாழ்கை ஒரு வினொதம்,அதனை கண்டரியுங்கள்
வாழ்கை ஒரு இலக்கு, அதனை எட்டி பிடியுங்கள்
வாழ்கை ஒரு சந்தர்ப்பம்,அதனை பயன்படுத்திக் கொல்லுங்கள்.
வாழ்கை ஒரு உறுதிமொழி,அதனை நிறைவேற்றுங்கள்.
வாழ்கை ஒரு அழகு,அதனை ஆராதியுங்கள்
வாழ்கை ஒரு உணர்வு,அதனை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்
வாழ்கை ஒரு சோகம்,அதனை கடந்து வாருங்கள்.
வாழ்கை ஒரு துயரம்,அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
வாழ்கை ஒரு போராட்டம், அதனை எதிர்கொள்ளுங்கள்
வாழ்கை ஒரு பயணம், அதனை புகழுடன் முடித்து கொள்ளுங்கள்.
வளரிளம் பருவப் பென்னே, நீ உன்னை அறிந்தால்,
நீ உன்னை அறிந்தால்.....
உலகத்தில் போராடலாம்....
உயந்தாலும், தாழ்ந்தாலும் தலை
வணங்காமல் நீ வாழலாம் ! !